28 ஜனவரி 2011

பாரிசில் தமிழ் இளைஞர்களின் அடாவடி ஆதாரத்துடன்!

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் வாழும் இலங்கைத் தமிழ் இளைஞர்களில் சிலர் எப்போது பார்த்தாலும் சண்டை, சச்சரவு, அடிதடி, வன்முறை எனறு சண்டித்தனத்திலேயே காலத்தைக் கழித்து வருகின்றனர்.
ஒரு சில இளைஞர்களின் இந்நடவடிக்கைகள் ஒட்டொமொத்த தமிழ் இனத்துக்கும் அவமானச் சின்னங்களாக மாறி உள்ளன.
புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் புத்திஜீவிகள் பெரிதும் மனம் உடைந்து போய் உள்ளார்கள். பிரான்ஸின் பிரபல தொலைக்காட்சி சேவைகளில் ஒன்று எம் - 06. இத்தொலைக்காட்சி சேவை வாரவாரம் சிறப்புப் புலனாய்வு என்று ஒரு தொடர் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றது.
கடந்த வாரம் இடம்பெற்ற சிறப்புப் புலனாய்வு நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழ் இளைஞர்களின் வன்முறை நடவடிக்கைகள் வீடியோ ஆதாரங்களுடன் ஒளிபரப்பப்பட்டன.
பொலிஸாரின் உதவி, ஒத்தாசை ஆகியவற்றுடன் இவ்வீடியோக்கள் பிடிக்கப்பட்டு இருந்தன. தமிழ் வர்த்தக மையங்கள் அமைந்துள்ள இடங்களில்தான் இவ்வாறான வன்முறைகள் பெரும்பாலும் வெடிக்கின்றன என்றும் காட்டப்பட்டது.
இந்நிலைமையில் பிரான்ஸில் உள்ள தமிழ் புத்திஜீவிகள் நிலைமையை எப்படி சீர் செய்யலாம்? என்பது குறித்து ஒன்றாகக் கூடி விரைவில் மந்திராலோசனை நடத்த உள்ளார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக