25 ஜனவரி 2011

சிங்களவருக்கு எதிரான போராட்டத்தை இன்றே தொடங்குங்கள்!

கடந்த வாரம் கழுத்து நெரித்து கோரமாக கொல்லப்பட்ட ஜெயக்குமார் என்ற ஊனமுற்ற தமிழக மீனவரின் மரணத்துடன் சிறீலங்கா கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 568 என தமிழக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதனை தடுப்பதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி 20 கடிதங்களை தபாலில் அனுப்பியுள்ளார். அதற்கு பதில் கொடுக்கும் முகமாக மன்மோகன் ஐந்து கடிதங்களை அனுப்பியுள்ளார்அதனை தவிர இந்திய மத்திய அரசும், மாநில அரசும் தமிழக மக்களின் உயிரை பாதுகாக்க எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. தமிழக மக்களை ஈழத்தமிழ் மக்களாகவே சிறீலங்கா அரசு பார்க்கின்றது. அவர்களை படுகொலை செய்யவோ அல்லது சிறையில் அடைக்கவோ சிறீலங்கா அரசு தயங்குவதில்லை.
அதற்கு சிறந்த அண்மைய உதாரணமாக சட்டவாளர் கயல்விழியின் கைது நடவடிக்கையை குறிப்பிடலாம்.இந்தியா வல்லராசாக உயரப்போகின்றதாம், பல இந்திய மக்களின் கனவு அது தான். ஆனால் வல்லரசாக உயரும் ஒரு நாட்டுக்கு தேவையான அடிப்படைக்காரணிகளில் தமது மக்களை பாதுகாப்பதும், நாட்டில் ஜனநாயகத்தை தோற்றுவிப்பதும், பிராந்தியத்தில் ஜனநாயகத்தை தோற்றுவிப்பதும் முக்கியமானவை.
ஆனால் இந்தியாவில் ஜனநாயகம் மெல்ல மெல்ல செத்து வருகின்றது. அதனை தான் அண்மையில் எல்லைகள் அற்ற ஊகவியலாளர் அமைப்பும் தெரிவித்திருந்தது.தனது பிராந்தியத்தில் ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதை இந்தியா விரும்புவதில்லை, அதனை தான் பராக் ஒபாமாவும் தனது குற்றச்சாட்டாக முன்வைத்திருந்தார்,மேலும் 568 இந்திய மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் இந்திய மத்திய அரசு சிங்களத்தின் கால்களுக்குள் சுருண்டு கிடக்கின்றது. வல்லரசாகும் நாடு தனது குடிமக்களை பாதுகாப்பதை தான் முதன்மையானதாக கருதவேண்டும்
உதாரணமாக இஸ்ரேலின் எதிரிகளாக பல அரபு நாடுகள் உள்ளபோதும், நண்பர்களாக சில அரசு நாடுகள் உள்ள. அவர்கள் ஒரு இஸ்ரேலிய பொதுமகனை கொல்லட்டும் பார்க்கலாம். செங்கல் குவியல்களுக்குள் அரச அலுவலகங்களை தேட வேண்டிய நிலை தான் மறுகணம் அவர்களுக்கு ஏற்படும்.
ஏனெனில் அவர்களுக்கு தமது நாட்டு மக்களின் ஒரு உயிர் கூட உயர்வானது. இருந்து என்ன பயன் செத்து தொலையட்டும் என அவர்கள் பாரமுகமாக இருப்பதில்லை.ஆனால் இந்தியாவின் நிலை மறுதலையானது, தமிழர்கள் மீது விரோதம் கொண்ட வட இந்தியர்களின் பிடியில்; இருக்கும் மத்திய அரசு, பணத்திற்கும், பதவி சுகத்திற்கும் கும்மாளம் போடும் மாநில அரசின் பலவீனத்தை பயன்படுத்தி சிங்கள கடற்படையை கொண்டு தமிழர்களை படுகொலை செய்து வருகின்றதுஆனால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும், மத்திய அரசு பேசும், சிதம்பரம் பார்ப்பார், கிருஸ்ணா கதைப்பார் என காத்திருந்த தமிழக மக்களுக்கு இந்த வாரம் இடம்பெற்ற படுகொலை பொறுமையை இழக்கவைத்துள்ளது.
ஆனாலும், 568 உயிர்களை இழந்த பின்னர் தான் நாம் மனிதர்களாக மாறவேண்டுமா?
சரி இனி என்ன செய்யப்போகிறோம்?
இரண்டு நாள் ஊர்வலம், மூன்று நாள் கடையடைப்பு என எதிர்ப்பை காண்பித்துவிட்டு மூலையில் முடங்கப்போகிறோமா?
வீரத்தமிழன், செந்தமிழன், மறத்தமிழன் என்ற வார்த்கைளும், திருப்பாச்சி அருவாளும், மதுரை தமிழ் வீரமும் என்ற பஞ் வசனங்களும் வெள்ளித்திரைக்கு மட்டும் தானா?
மாநில அரசோ, மத்திய அரசோ எந்த ஒரு தமிழரையும் பாதுகாக்கப்போவதில்லை. தமிழ் மக்கள் தம்மை தமே பாதுகாக்க வேண்டும். அது தான் யதார்த்தமானது. ஏனெனில் படுகொலை செய்த சிங்கள கடற்படையை விட்டுவிட்டு, படுகொலைக்கு எதிராக போராடிய தமிழர்களை அல்லவா கைது செய்து வானில் ஏற்றி கொண்டு செல்கிறது மாநில அரசு.
எனவே நீங்கள் தான் போரடவேண்டும், நீங்கள் உயிருடன் வாழ, உங்களின் இனம் தப்பிப்பிழைக்க, உங்களின் சந்ததி பூமியில் வாழ போராடுங்கள்.
ஏழு கோடி தமிழ் மக்கள் உள்ள பூமியில் வெறும் 700 பேருக்கு கூட போராடும் சக்தி இல்லையா?
சிங்கள காடையர்களிடம் இருந்து விடுதலைபெற, அவர்களின் வன்முறைகளில் இருந்து தப்பி பிழைக்க நீங்கள் ஒவ்வொருவரும் போராடத்தான் வேண்டும்.
மீனவன் சாகிறான் நமக்கென்ன என்று விவசாயியோ, அல்லது அரச பணியாளரே அலட்சியம் செய்ய முடியாது, சிங்களவனின் இனத்துவேசம் என்பது ஒட்டுமொத்த தமிழினத்தையும் கருவறுப்பதாகும்இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20 இலட்சம் தேங்காய்களை கூட அவர்கள்; உண்ணவில்லை, கொழுத்தி விட்டார்கள். இந்தியா வடக்காக இருக்குது என்று குறுகிப்படுத்த துட்டகெமுனு பரம்பரையாச்சே அவர்கள். எப்படி இந்திய தேங்காயை தின்பார்கள்?? சிங்கள காடையர்களுக்கு எதிரான போராட்டத்தை கோரமாக படுகொலை செய்யப்பட்ட 568 தமிழக மீனவர்களின் புதைகுழிமேல் கைவைத்து இன்றே தொடங்குங்கள் நாளை என்பது நமக்கில்லை.
நன்றி: ஈழம் ஈ நியூஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக