01 ஜனவரி 2011

பிரதமர் உருத்திரகுமாரன் வாழ்த்து செய்தி!

புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை மக்களுக்கு அறிவிக்கும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் கனடிய தமிழ் வானொலிக்கு பேட்டி ஒன்றை வழங்கியிருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு கடந்த தமிழீழ அரசுக்கான செயற்பாடுகளுக்கு எந்த தடையும் ஏற்படவில்லை. சுதந்திர தமிழீழத்திற்கு இன்றியமையாதது என்னவெனில் புலத்தில் வாழும் மக்களின் உறுதியான ஆதரவு என இப்புத்தாண்டுச் செய்தியாக புலம்பெயர் மக்களுக்கு கனடிய வானொலியூடாக நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்திருக்கின்றார்.
மேலும், நாடு கடந்த தமிழீழ அரசின் நடவடிக்கைகளுக்கு தாயக மக்களினதும், தமிழக மக்களினதும், உலகவாழ் தமிழ்மக்களினதும் முழுமையான ஆதரவினை எதிர்பார்ப்பதோடு, மலரும் இப்புத்தாண்டில் நம்பிக்கையுடன் நேர்மை வெல்லும் சத்தியம் வெல்லும் தர்மம் வெல்லும் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக