10 ஜனவரி 2013

சிரானிக்கெதிரான குற்றப் பிரேரணை குறித்து அமெரிக்கா கவலை!

News Serviceஇலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள குற்றப் பிரேரணை மற்றும் அது தொடர்பிலான நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கா தமது கவலையை வெளியிட்டுள்ளது. அத்துடன், நீதித்துறை மீதான நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் அழுத்தம் பற்றி தீவிரமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. என்று இராஜாங்க திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்தார்.
அதேவேளை பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை குறித்து கவலையடைவதாக இதற்கு முன்னரும் தாம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள ரிசானா நபீக் குறித்து தகவல் வெளியிட அமெரிக்கா மறுத்துள்ளது.
ஏனெனில், ரிசானா நபீக் குறித்து தாம் அறிந்திருக்கவில்லை எனவும் அதுபற்றி ஆராய்ந்து கருத்து வெளியிடப்படும் எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக