18 ஜனவரி 2013

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வை பிரித்தானியா பகிஷ்கரிக்கக் கூடும்?

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வினை பிரித்தானிய பகிஷ்கரிக்கக் கூடுமென அந்நாட்டு பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. லண்டன் டைம்ஸ் என்ற பத்திரிகை இந்த ஊகத்தை வெளியிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இவ்வாறு, அமர்வுகளை பிரித்தானிய பகிஷ்கரிக்கக் கூடுமென குறித்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் ஏனைய பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இவ்வாறு அமர்வுகளை பகிஷ்கரிக்கக் கூடுமென தெரிவித்துள்ளது.
மனித உரிமை நிலைமைகள் மேம்படுத்தப்படாவிட்டால் அமர்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என கனடா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும், பொதுநலவாய நாடுகள் அமர்வுகளில் பங்கேற்பது குறித்து பிரித்தானிய அரசாங்கமோ அல்லது பிரதமரோ உத்தியோகபூர்வமாக எவ்வித அறிவிப்புக்களையும் இதுவரையில் விடுக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக