03 ஜனவரி 2013

பல்கலை மாணவர் கைது கவலையளிக்கின்றது!

யாழ்.பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் மாணவர்களது கைதானது கவலையளிப்பதாக யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஓ. எல். ஆர் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற 2012ஆம் ஆண்டிற்கான கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வில் ஆசியுரையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவும் கலந்துகொண்டார். இங்கு யாழ். ஆயர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கைது செய்யப்பட்டதனையடுத்து தற்போது கல்வி சார் சகல செயற்பாடுகளையும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளமை மாணவர்களின் கல்வியினை மேலும் பாதிப்பதாக அமையும். இந்த நிலைமை மேலும் நீடிக்காமல் சம்பந்தப்பட்ட சகலரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” – என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக