13 ஜனவரி 2013

சர்வதேச நீதிமன்றை நாடப்போவதாக சட்டவாளர்கள் தெரிவிப்பு!

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டமையை ஆட்சேபித்து சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்லப் போவதாக சட்டத்தரணிகள் எச்சரித்துள்ளனர். சட்டத்தரணிகள் கூட்டு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சட்டத்தரணி நுவன் போபகேயின் தகவல்படி, இதற்காக தாம் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம், பொதுநலவாய நாடுகள் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் உதவியை எதிர்ப்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் சட்டத்தரணிகளின் கூட்டு நேற்று பிரதமநீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை சந்தித்தனர். இதேவேளை அடுத்த பிரதம நீதியரசராக யார் நியமிக்கப்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று சட்டத்தரணிகளின் கூட்டு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக