17 ஜனவரி 2013

தமிழர் பேரவையுடன் மங்கள சமரவீர பேச்சுவார்த்தை?

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, பிரித்தானிய தமிழர் பேரவையுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. மங்கள சமரவீரவை அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரி;த்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட ரீதியான சந்திப்பே நடைபெற்றதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.எமது சமூகத்திற்கு வெளியேயான சமூகத்தினருடன் உறவுகளைப் பேணாமல் எமது அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த சந்திப்பு உத்தியோகப் பற்றற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச தலையீட்டுடன் மட்டுமே அனைவரினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியத் தீர்வுத் திட்டமொன்றை தற்போதைய அல்லது எதிர்கால இலங்கை அரசாங்கத்தினால் வழங்க முடியுமு; எனஅ வர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ரீதியில் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று தீர்வுத் திட்டங்களை எட்டுவதில் எவ்வித தவறும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக