12 ஜனவரி 2013

"முடிந்தால் புதிய பிரதம நீதியரசரை நியமியுங்கள்"அரசுக்கு அசாத்சாலி சவால்

newsபிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையில் அரசாங்கம் வெற்றிபெறலாம். ஆனால் புதிய பிரதம நீதியரசரை நியமிக்குமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுகின்றோம் என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத்சாலி தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க இதுவரை பதவி விலகாமல் இருக்கின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
மேலும் குற்றப் பிரேரணையில் கையொப்பம் இட்ட அனைத்து ஆளும் கட்சி எம்.பி.க்களையும் நாங்கள் நீதிமன்றத்துக்கு அழைப்போம்.
அரசாங்கம் புதிய நீதியரசர் ஒருவரை நியமிக்க முற்பட்டால் 500 பேரின் மரணத்துக்கு மத்தியிலேயே புதிய பிரதம நீதியரசரை நியமிக்க வேண்டியேற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக