09 ஜனவரி 2013

கவலையுடன் காணப்பட்ட தமிழ் இராணுவப் பெண்கள்!

 இராணுவத்தின் மகளிர் படையணியில் அண்மையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் பெண்கள், நேற்றைய தினம்(08) கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கே இராணுவத் தளபதியின் பாரியாரை அவர்கள் சந்தித்துள்ளார்கள். அங்கே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இராணுவத் தளபதியின் மனைவி கலந்துகொண்டதோடு, அவர்களுக்கு விருந்தும் பரிமாறப்பட்டது. இருப்பினும் பல பெண்களின் முகத்தில் சோகத்தையே காணக்கூடியதாக இருந்ததாக, விடையம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இவர்களில் பல தமிழ்ப் பெண்கள் நோய்வாய்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவர்கள் கட்டாயமாக கொழும்பு செல்லவேண்டும் என கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் மேலும் அறியப்படுகிறது. பல பெண்கள் கைகளில் மருந்து மாத்திரையோடு, இருந்ததாகவும் பின்னர் உணவருந்தச் சென்றதாகவும் மேலும் அறியப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக