03 ஜனவரி 2013

கொழும்பு திரும்புமாறு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு கோத்தா உத்தரவு!

சிறிலங்காவின் தலைமை நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது, மக்கள் எழுச்சி கொள்ளச் சாத்தியம் இருப்பதால், அதை அடக்குவதற்காக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ‘லங்கா நியூஸ்வெப்‘ தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான பிரதித்தூதுவராகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவினால், இம்மாதம் 4ம் நாள் தொடக்கம் 20ம் நாள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தனக்கு மிகவும் நம்பிக்கையான அதிகாரி என்ற வகையில், இந்தப் பணியை மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் ஒப்படைக்க பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கொழும்புக்கு பயணமாவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
2010 அதிபர் தேர்தலுக்குப் பின்னர், சினமன்கிரான்ட் விடுதியில் சரத் பொன்சேகாவை தடுத்து வைத்திருந்த போது, ராஜபக்ச அரசாங்கத்துக்காக எல்லாவிதமான அழுக்குப் பணிகளையும் ஆற்றியவர் இவர்.
வரும் 8ம் நாள் அதே பணி மீண்டும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் ‘லங்கா நியூஸ்வெப்‘ செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக