06 ஜனவரி 2013

அரச சார்பற்ற நிறுவனங்கள் - அமெரிக்கா – புலம் பெயர் புலிகள் இணைந்து சதி என்கிறது இலங்கை

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை, ஜெனிவா மனித உரிமை பேரவையின் மாநாட்டில் சமர்பிக்க இலங்கையில் உள்ள மூன்று அரசசார்பற்ற நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் 2012 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் புலம்பெயர் புலிகளுடன் இணைந்து, இலங்கைக்கு எதிராக செயற்பட்ட நிறுவனங்கள் என்பது தெரியவந்துள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம் சம்பந்தமான அறிக்கையை இந்த நிறுவனங்கள் ஏற்கனவே, ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளன. ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் இரண்டு பேர் இது தொடர்பாக இலங்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜெனிவா மனித உரிமை பேரவையின் மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் மார்ச் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக