16 ஜனவரி 2013

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தக் கூடிய ஆற்றல் ரணிலுக்கு இல்லை!

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தக் கூடிய ஆற்றல் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கிடையாது என ஜே.வி.பியின் சிரேஸ்ட உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்திய போதிலும் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை வழிநடத்தக் கூடிய ஆற்றல் ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடையாது.
அத்துடன் தனித் தனியான போராட்டங்களின் மூலம் ஆட்சியிலுள்ள அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார் குறிப்பாக பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே ரணில் விக்ரமசிங்கவும் கொண்டிருந்தார் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்தில் ரணிலின் நடவடிக்கைகள் குறித்து கட்சி உறுப்பினர்களே அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதிக்கு எதிராக போராட்டங்களை நடாத்துவதனைப் போன்று ரணில் நடித்து வருகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக