15 ஜனவரி 2013

ஷிராணி இருக்கிறாரா என உயர்நீதிமன்ற வளாக வாசலில் தேடும் படையினர்!

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அமைந்திருக்கும் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பன்மடங்காக அதிகதிரிக்கப்பட்டுள்ளதுடன் உயர்நீதிமன்றத்தின் பிரதான வாயில்கள் இரண்டும் இழுத்து மூடப்பட்டுள்ளன. அங்கு வரும் வாகனங்களில் யார் வருகிறார்கள் என இனம்கண்டு கொண்டபின்னர்தான் அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா வாகனத்தில் வருகிறாரா என மிக உன்னிப்பாக படையினர் அவதானிக்கின்றனர். நீதியரசர்களை இனங்கண்டுக்கொண்டதன் பின்னரே பாதுகாப்பு தரப்பினர் அவர்களை உயர்நீதிமன்றத்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கின்றனர்.
வாகனத்தில் இருக்கின்ற நீதியரசருக்கு பொலிஸார் மரியாதை செலுத்துவதுடன் அந்த வாகனத்திற்குள் வேறுயாராவது இருக்கின்றனரா? என்பது தொடர்பிலும் கேட்டறிந்து கொள்கின்றனர். இதேவேளை, சட்டத்தரணிகள் பயணிக்கும் எந்தவொரு வாகனமும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. எனினும், அதில் பயணிப்போர் தொடர்பில் கடமையில் இருக்கும் பொலிஸார் கேட்டறிந்து கொள்கின்றனர்.
நீதிமன்ற வளாகத்திற்குள் செல்வதற்கு ஊடகங்களைச்சேர்ந்த புகைப்படபிடிப்பாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் செல்வதற்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது. அலரிமாளிகையிலிருந்து வந்த உத்தரவுக்கு அமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கடமையில் இருக்கும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக