09 ஜனவரி 2013

புகலிடக் கோரிக்கையாளர்களை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!

51 புகலிடக் கோரிக்கையாளாகளை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
படகு மூலம் அவுஸதிரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்ல முற்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனீ மாவட்டத்தின் க்யூ பிரிவு காவல்துறையினர் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உளவுத்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் புகலிடக் கோரிக்கையாளர்களில் 28 ஆண்களும், 10 பெண்களும் 13 சிறுவர் சிறுமியரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக