08 ஜனவரி 2013

அவசர இடமாற்றத்தால் ஆசிரியர்கள் மத்தியில் பதற்றம்!

அவசர அவசரமான ஆசிரியர் இடமாற்றத்தை கைவிட்டு ஆசிரியர் இடமாற்ற சபையை கூட்டுமாறு கல்வி தொழிற்சங்கவியலாளர்களின் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நிறுவன சட்ட தொகுப்பை மீறி தன்னிச்சையான ஆசியர் இடமாற்றம் இடம்பெற்று வருவதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் ஆசிரியர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு ஏதாவது தீர்வு வழங்காவிட்டால் எதிர்காலத்தில் அது விருத்தியடைக் கூடும் எனவும் அச்சங்கம் கோரியுள்ளது.
தற்போதைய நிலையில் அவசர ஆசிரியர் இடமாற்றத்தை கைவிட்டு முறையான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்´டும் என அதிகாரிகளிடம் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக