01 ஜனவரி 2013

தமிழ் பெண்களை காக்குமாறு மிசேல் ஒபாமாவிடம் கோரிக்கை!

இலங்கையில் தமிழ் பெண்கள் மீது சிங்கள இராணுவத்தினர் நடத்திவரும் பாலியல் வன்முறையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிசேல் ஒபாமாவுக்கு அந்த அமைப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
இலங்கைப் போரில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த சுமார் 90 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் தங்கள் கணவர்களை இழந்துள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் வறுமையில் வாடி வருவதாகவும், அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய பெண்களை குறிவைத்து இலங்கை இராணுவத்தினர் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதாகவும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக