12 ஜனவரி 2013

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அமெரிக்கா விசனம்!

நம்பிக்கையில்லா தீர்மானம் அதிகாரம் தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றின் உத்தரவினை மீறி நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. ஜனநாயக நிறுவனங்களுக்கு இடையிலான அதிகாரப் பொறிமுறைமை தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமெரிக்கா
நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில் நடத்தப்பட்ட போராட்டங்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளதுடன்
அஹிம்சை வழியில் நடத்தப்படும் போராட்டங்களுக்கு பூரண பாதுகாப்பை அரசாங்கம் வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. நல்லாட்சி மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக