12 ஜனவரி 2013

அரசின் திட்டமிட்ட சதி!-சிறீதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிரனர் எஸ். ஸ்ரீதரனின் கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்திலிருந்து இன்று (12) வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச் சம்பவம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிரனர் எஸ். ஸ்ரீதரனிடம்  தொடர்பு கொண்டு கேட்ட போது,
இச்சம்பவத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வேலன் என்று அழைக்கப்படும் வேலமா லிகிதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளரான கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த வசந்தன் நேற்று (11) கைது செய்யப்பட்டார்.
இவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்டையிலேயே லிகிதன் கைது செய்யப்பட்டதாகவும் அலுவலகத்திலிருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் வசந்தன் என்பவர் கடந்த ஆறு மாதமாக கட்சியுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை எனவும் கடந்த வாரமே அவர் மீண்டும் கட்சியுடன் இணைந்து கொண்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிரனர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தனது அலுவலகத்திற்கான பாதுகாப்பு கடந்த டிசம்பர் மாதம் மூன்றாம் திகதியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.
இந்த விடயம் குறித்து சபாநாயகர், பொலிஸ்மா அதிபர், வடமாகாண பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே இது அரசினது திட்டமிட்ட சதி என தான் சந்தேகிப்பதாக ஸ்ரீதரன் மேலும் குறிப்பிட்டார் என அத தெரண குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக