15 ஜனவரி 2013

கழிவு எண்ணெய் தாக்குதல்! யாழில் போராட்டம் கைவிடப்பட்டது!

jaffசம உரிமை இயக்கத்தினரால் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இடம்பெற்ற கையேழுத்து போராட்டத்தில் கழிவு எண்ணெய் வீசப்பட்டதை அடுத்து போராட்டம் இடை நடுவில் கைவிடப்பட்டுள்ளது.வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை நிறுத்த கோரியும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைகழக மாணவர்களை விடுதலை செய்யக்கோரியும், கடத்தல் மற்றும் கைதுகளை நிறுத்த கோரியும் சம உரிமை இயக்கத்தினரால் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.
இதனால் இந்த போராட்டத்தை இடை நடுவில் சம உரிமை இயக்கத்தினர் முடித்துக் கொள்வதாக அங்கு கூடியிருந்த மக்களுக்கு அறிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக