16 ஜனவரி 2013

அனைத்து உரிமைகளும் மிருகத்தனமாக கட்டுப்படுத்தப்படுகிறது!

நாட்டின் அனைத்து உரிமைகள் மற்றும் ஜனநாயகம் என்பன மிருகத்தனமான  முறையில் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையின் அரசியல் நிலமை மிகவும் கீழ் மட்டத்தில் இருக்கின்றது. குறிப்பாக தற்போது அரசாங்கத்தின் உயர் தலைவர்கள் போதைப்பொருள் கடத்துபவர்களுக்கும்,
குற்றவாளிகளுக்கும் பின்புலமாக செயற்படுவதுடன், அவர்களை தட்டிக் கொடுக்கின்றனர் இதனால் இலங்கையில் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய இலங்கையின் சூழ்நிலை குறித்து அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் இதிலிருந்து இலங்கையை மீட்பதற்கு எந்த சூத்திரமும் தம்மிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் அனைத்து உரிமைகள் மற்றும் ஜனநாயகம் என்பன மிருகத்தனமான முறையில் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் நினைவு நிகழ்வில்  கலந்துக் கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக