24 ஜனவரி 2013

ஜனநாயகம் தோற்றபின் அமைதிகாக்க முடியாது!

newsதிருச்சபையும், ஏனைய மத அமைப்புகள் மற்றும் குடியியல் சமூகமும், மீண்டும் மீண்டும் எச்சரித்திருந்த போதிலும், நிறைவேற்று அதிகாரமும்,நாடாளுமன்றமும் அரசியலமைப்பை அலட்சியம் செய்த பின்னர், இலங்கையில் ஜனநாயகம் தோன்றுவதற்கு இனிமேல் வாய்ப்பில்லை. இவ்வாறு எச்சரித்துள்ளார் அங்கிலிக்கன் திருச்சபையின் கொழும்பு மறைமாவட்ட பேராயர் அதிவண. திலோராஜ் கனகசபை.
கடந்த சிலநாட்களில் சிறிலங்காவில் ஜனநாயகம் முற்றாகவே அழிந்து போய்விட்டதாக, பேராயர் கடும் சொற்களில் தமது அதிமேற்றிராணியாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்,
இலங்கையில் நடைபொறும் அராஜகங்களைப் பார்த்து கிறிஸ்தவ திருச்சபை என்ற வகையில்,அமைதியாக இருக்கமுடியாது.
அமைதியாக இருப்பது எமது கடவுளை அவமதிப்பதும், கடவுளின் மக்களுக்குச் செய்யும் துரோகமுமாகும்.
எனவே, இறுதியான முடிவை எடுப்பதற்கு திருச்சபை எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை,வரும் பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர நாளன்று வெள்ளை ஆடைய அணிந்து பிரார்த்தனைகளில் பங்கேற்குமாறும் அங்கிலிக்கன் திருச்சபையின் கொழும்பு பேராயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக