14 ஜனவரி 2013

நான் யாருக்கும் அடிபணிய போவதில்லை!

கடந்த வாரம் எனது முகப்புத்தக பதிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு புலம்பெயர் மக்கள் உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தையே முன்வைத்தேன். என் மூலமோ, கட்சி மூலமோ உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறவில்லை.
உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் மூலமே உதவிகளை மேற்கொள்ள சொன்னேன். இதனை சில இணையதளங்கள் "தமிழ் தேசியம் கூறிக் கொண்டு தாயகத்தையும் புலத்தையும் ஏமாற்றும் சிங்களக் கைக்கூலிகளிடம் அவதானம் " என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றினை பதிவேற்றியுள்ளது.
இதில் என்னை பற்றி தவறாகவும், யதார்த்தத்தத்தில் நினைக்க முடியாத, உண்மைக்கு புறம்பாகவும் வெளியிட்டுள்ளனர். இதற்கெல்லாம் அடியெடுத்துக் கொடுத்த, இந்த உண்மைக்கு புறம்பான தகவல்களை 14.10.2012 அன்று அச்சேற்றிய பத்திரிகைக்கும், கட்டுரையின் எழுதிய அந்த பத்திரிக்கை ஆசிரியரிடம் ஒரு கேள்வி கேட்பேன், "அதில் நான் செய்ததாக கூறப்படும் துரோகங்கள்,தவறுகள்,சலுகைகள் என்பன நிரூபிக்க படவேண்டும்" என்று அப்போது அவர்களிடம் மௌனம் ஒன்று தான் வரும்.
என் அரசியல் எதிர்காலத்தினை விரும்பாத சிலரின் தூண்டுதலிலே இச் செயற்பாடுகள் நடப்பதும் எனக்கு தெரியும், அவர்களுக்கும் ஒன்று சொல்லி விடுகின்றேன். என் மீது இன்றும் நம்பிக்கை வைத்திருக்கும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் நம்பிக்கையை ஒருபோதும் சிதறடிக்க மாட்டேன். ஏனெனில் அவர்கள் தற்போது வட கிழக்கில் தமிழ் அரசியல் உறுப்பினர் இல்லாத மாவட்டமாக இருந்து பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். அம்பாறை மாவட்ட தமிழர்கள் என்னுடன் இருக்கும் வரைக்கும் நான் யாருக்கும் அடிபணிய போவதில்லை. அடி பணிபவன் தமிழனுமில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக