31 ஜனவரி 2013

சனல் 4 தொலைக்காட்சியிடம் சிக்கியுள்ள புது ஆதாரங்கள்!

சரணடைந்த புலிகள் பலரது கண்களையும் கைகளையும் கட்டி, அவர்கள் மண்டையில் சுடும் இலங்கை இராணுவத்தின் கோரக் காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு உலகையே அதிரவைத்தது பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி. த கில்லிங் பீஃல்ட் (கொலைக் களங்கள்) என்று பின்னர் அது வெளியிட்ட ஆவணப்படத்தில் தேசிய தலைவரது கடைசி மகன் பாலச்சந்திரன் குறித்த ஆதார வீடியோவும் வெளியாகியிருந்தது. ஆனால் தற்போது சனல் 4 தொலைக்காட்சியிடம் புது ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக, தகவல்கள் கசிந்துள்ளது. சிக்கியுள்ள வீடியோவில் எவ்வகையான காட்சிகள் இருக்கிறது என்பதனை இதுவரை உறுதிசெய்ய முடியவில்லை.
இருப்பினும் தற்போது சனல் 4 புதிதாக ஒரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளது என்றும், அதில் இலங்கை அரசின் போர் குற்றம் இல்லையெனில் இன அழிப்பு தொடர்பான வீடியோ காட்சிகள் அடங்கியுள்ளதாகவும் அதிர்வு இணையம் அறிகிறது. இக் காட்சிகள் புதிதான ஆதாரங்கள் என்றும், இதுவரை வெளியிடப்படாத ஒன்றாக உள்ளதாகவும், விடையம் அறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். இக் காட்சிகள் அடங்கிய ஆவணப்படமானது மிக விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும், இது வெளியாகும் தருணத்தில் மீண்டும் உலகை உலுக்கும் பல காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது.
வரும் மார்ச் மாதம், ஜெனீவாவில் நடக்கவிருக்கும் மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கடுமையான பிரேரணை ஒன்றைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வெறும் பிரேரணையாக மட்டும் அமையாது, அமெரிக்கா முன்மொழியும் சில விடையங்களை இலங்கை அரசானது நிச்சயம் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் ஒன்றாக அமையவிருக்கிறது என்று சிலர் எதிர்வு கூறியுள்ளார்கள். இதற்கு வலுச் சேர்க்கும் வகையில், அதிர்ச்சிதரும் ஆதாரங்கள் அடங்கிய வீடியோவையே சனல் 4 வெளியிடவுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக பல உலக நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவாக மாறும் நிலை தோன்றலாம் !
நன்றி:அதிர்வு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக