11 ஜனவரி 2013

சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவிக்கு மூன்று சட்டத்தரணிகள் போட்டி!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட மூன்று சட்டத்தரணிகள் முன்வந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, உபுல் ஜயசூரிய, ஆர்.ஆர்.எஸ்.தங்கராஜா மற்றும் திரந்த வலலியத்த ஆகிய மூவரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக தற்போது விஜேதாஸ ராஜபக்ஷ செயற்பட்டு வருகிறார்.
எதிர்வரும் மார்ச் மாதம் இவரது பதவிகாலம் முடிகிறது. அதன்பின் இரண்டாம் தடவை போட்டியிடப்போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.
இதனால் புதியவர்கள் போட்டியிட முன்வந்துள்ளனர். இவர்களுக்கான தேர்தல் பெப்ரவரி 20ம் திகதி இடம்பெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக