31 டிசம்பர் 2010

வதிரியில் குடும்பப்பெண் கடத்தப்பட்டுள்ளார்.

வடமராட்சியில் ஒரு குடும்பப் பெண் கடத்தப்பட்டுள்ளார். வதிரியைச் சேர்ந்த 48 வயதுடைய யோகநாதன் புஸ்பாதேவி என்பவரே கடத்தப்பட்டுள்ளார்.
வெள்ளைவானில் சென்ற 6க்கும் அதிகமான ஆயததாரிகள் இவரைக் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தல்காரர்களிடம் இருந்து தமது தாயை மீட்க 6 பிள்ளைகளும் ஊராரும் போரடிய பின்னும் துப்பாக்கியைக் காட்டி பெண்ணைக் கடத்திச் சென்றுள்ளனர். வர்த்தக நிலையம் ஒன்றைக் நடத்தி வந்த இவரின் கணவர் யுத்தத்தில் ஏற்கனவே கொல்லப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக