
அப்படிப் பார்க்கையில் இந்தியா முழுதும் விஹாரைகள் இருக்கின்றன. புத்தர் என்கின்ற சித்தார்த்தன் யார் என்பதை இன்றைய சிங்களவர்கள் தேடியறிந்து கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர். அநாவசியமான கருத்துக்கள் மக்களிடையே அசௌகரியங்களை உண்டு பண்ணுகின்றன. எல்லாவல மோதானந்த தேரர் போன்றோரது இவ்வாறான கருத்துக்கள் நல்லிணக்கத்துக்கு தடையாகவே அமைகின்றன. அதாவது, இந்நாட்டில் சகலரும் ஐக்கியப்பட வேண்டுமென்பதோ இங்கு நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமென்பதோ அவசியமானதொன்றல்ல என்பதையே பெரும்பான்மை சிங்கள சமூகம் கூறிவருகின்றது.
சர்வதேசம் இவ்வாறான உள்நோக்கம் கொண்ட கருத்துக்களை நம்பிவிடப் போவதில்லை. ஏனெனில் இலங்கையின் வரலாற்றினை சர்வதேசம் புரிந்து கொண்டுள்ளது. இவ்வாறான காலப்பகுதியில் தான் அரசாங்கம் தேசிய கீதம் தொடர்பில் குழப்பிக் கொண்டிருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக