17 டிசம்பர் 2010

சரத் பொன்சேகா வெற்றிபெற வேண்டுமென அமெரிக்கா விரும்பியது.

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா வெற்றி பெற வேண்டுமென அமெரிக்கா விரும்பியதாக விக்கிலீக்ஸ் இணையம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
சரத் பொன்சேகா தேர்தலில் வெற்றியீட்டினால் இலங்கையின் அரசியல் கட்டமைப்பில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என அமெரிக்கத் தூதுவர் பெட்ரிக்கா புட்டீனாஸ் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 22ம் திகதி அமெரிக்கத் தூதுவர் இதனை அறிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா சில சாதகமான உறுதி மொழிகளை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ஷ அரசாங்கத்தை விடவும் சரத் பொன்சேகாவின் புதிய அரசாங்கத்துடன் கடயைமாற்றுவது சுலபமானதாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக