18 டிசம்பர் 2010

சர்வதேச விசாரணைக்கு அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 செனட் சபை உறுப்பினர்களும், 30 பாராளுமன்ற உறுப்பினர்களும் அமெரிக்க ராஜாங்கச் செயலளார் ஹிலரி கிளின்ரனுக்கு கடிதம் ஊடாக இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்தும் இலங்கை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டுமென கோரியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒத்துழைப்புடன் குறித்த விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்படாது வெளியிடப்படும் அறிக்கைகளின் நம்பகத் தன்மை குறித்து சந்தேகம் நிலவுவதாகத் தெரிவித்துள்ளனர்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்த குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென வட கரோலினா மாநிலத்தின் குடியரசு கட்சி செனட்டர் ரிச்சர்ட் புர் தெரிவித்துள்ளார். இலங்கையில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முனைப்புக்கள் தோல்வியடைவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வரும் அதேவேளை, இலங்கையில் எந்தவிதமான யுத்தக் குற்றச் செயல்களும் இடம்பெறவில்லை என அரசாங்கம் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக