17 டிசம்பர் 2010

தமிழர் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம்!தோமஸ் சவுந்தரனாயகத்திற்கு சிவாஜிலிங்கம் பதிலடி.

இராணுவத்தினருடன் சேர்ந்து கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சிகளை நடத்துங்கள.; அல்லது இன்னிசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுங்கள.; இவைகள் வேறு விடயம்.
ஆனால், தமிழ் மக்களின் உணர்வுகளை, அவர்களின் இன்றைய நிலைமைகளைப் புறந்தள்ளிவிட்டு ஒரு சாராரைத் திருப்திப்படுத்துவதற்காகக் கருத்துகளைக் தெரிவிக்காதீர்கள் என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் படையினர் ஏற்பாட்டில் இடம்பெற்ற நத்தார் கரோல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யாழ். மறை மாவட்ட ஆயர் வண தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளார் வெளியிட்டிருந்த கருத்துகள் தொடர்பிலேயே சிவாஜிலிங்கம் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.
நீண்ட காலப் போருக்கு முடிவை ஏற்படுத்திய படையினருக்கு நன்றி கூற வேண்டுமென யாழ். மறை மாவட்டப் பேராயர் தெரிவித்திருந்தார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம்,
போர் முடிவுக்கு வந்து விட்டது என்பது வேறு விடயம். ஆனால,; அந்தப் போர் எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது? எத்தனை ஆயிரம் தமிழர்கள் தமது உயிரை அநியாயமாகத் தியாகம் செய்தனர்? எத்தனை ஆயிரம் பேர் அகதிகளாயினர்? அவர்களுக்கு ஏற்பட்ட அவலங்கள், இன்று அந்த மக்கள் எதிர்நோக்கும் துன்பங்கள் போன்றனவற்றினையெல்லாம் மறந்த விட்டு, உயர் நிலையில் வைத்து மதிக்கப்படும் ஒரு பேராயர் பொறுப்பற்ற விதத்தில் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருப்பது மன வேதனையை அளிக்கிறது.
அவரின் கூற்றினை தமிழ் உணர்வுமிக்க எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அண்மையில் புனித பாப்பரசரால் கர்தினால் ஆக திருநிலைப்படுத்தப்பட்ட வண. ரஞ்சித் மல்கம் ஆண்டகை அவர்கள், நல்லிணக்க ஆணைக் குழு முன் தோன்றி தமிழ் மகக்ள் தொடர்பில் தனது கருத்துகளை யாருக்கும் அச்சமின்றித் தெரிவித்திருந்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர் தாயகம் என்றும் அங்கு ஏனைய குடியேற்றங்கள் இடம்பெறக் கூடாதெனவும அவர்; வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் யாழ் மறை மாவட்ட பேராயர் இவ்வாறு தெரிவித்திருப்து கண்டனத்துக்குரியது என சிவாஜிலிங்கம் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக