24 டிசம்பர் 2010

பரந்தளவில் விசாரணை நடத்த விரும்புகிறோம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினை விடவும், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு பரந்தளவிலானது என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினைத் தவிர்ந்த ஏனைய தரப்பினருடனும் தொடர்புகளைப் பேண நிபுணர்கள் குழு விரும்புவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதனைத் தவிர வேறும் விடயங்கள் குறித்தும் நிபுணர்கள் குழு கவனம் செலுத்தும் என தெரவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவுடன் மட்டுமா உறவுகளைப் பேணும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பதில் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் பரந்தளவில் விசாரணை நடத்துவதற்கு விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக