06 டிசம்பர் 2010

மகிந்தவின் பிரித்தானிய வருகை புலம்பெயர் தமிழர்களுக்கு புத்தெழுச்சி!

மகிந்த ராஜபக்ஷ இங்கிலாந்து வந்த பின்னர் ஏற்பட்ட அதிர்வலைகள் புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளில் புத்தெழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. மகிந்தவிற்கு எதிரான ஆர்பாட்டத்தை வெற்றிகரமாக நடாத்திய பிரித்தானிய தமிழரை பல நாடுகளிலும் இருந்து அவ்வவ் நாடுகளில் வாழும் தமிழர்கள் பாராட்டி வருகிறார்கள். மேலும் சனல் – 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஒளிநாடாக்கள் புலம் பெயர் தமிழரை மட்டுமன்றி உலகளாவிய தமிழர்கள் மத்தியிலும் பெரும் கோபத்தை கிளப்பி விட்டுள்ளது. இவ்வளவு மோசமான காரியங்கள் நடந்துள்ளதா என்ற கோபம் மானமுள்ள தமிழரிடையே பேரலையாக வீச ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்வை கொழும்புத் தமிழ் ஊடகங்களால் முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிட முடியாமல் போனமை கவனிக்கத்தக்கது. அதேவேளை புலம் பெயர்ந்த தமிழ் மக்களை பிளவுபடுத்தி அரசியல் செய்யப் போடப்பட்ட திட்டம் படு தோல்வியடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். புலம் பெயர் தமிழரை ஒற்றுமைப்படுத்துவதற்காக மகிந்த தொடர்ந்து வெளிநாடுகளுக்குவருவது நல்லது என்ற கருத்து நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக