30 டிசம்பர் 2010

எமது விசாரணைகளை துரிதப்படுத்துங்கள் என அரசியல் கைதிகள் வேண்டுகோள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளிடம் நல்லிணக்க ஆணைக்குழு சாட்சியங்களை பதிவு செய்து கொண்டுள்ளது.
இன்று காலை 10.30 முதல் மாலை 4 மணிவரை சாட்சியங்களை பதியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்தார்.
20 தமிழ் அரசியல் கைதிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. அவர்கள் அந்த ஆணைக்குழுவிற்கு கூறியதாவது, 'எங்கள் மீது உள்ள விசாரணைகளை துரிதப்படுத்துங்கள், எங்களுக்கு அது மிகுந்த நன்மையாக இருக்கும்' என கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
அத்துடன் நலிணக்க ஆணைக்குழு வடக்கில் விஜயம் செய்த வேளையில் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் அவர்களை சந்தித்து தன்னுடைய பிள்ளைகள் குறித்த நிலவரங்களை அறியுமாறு ஆணைக்குழுவிடம் கூறியிருக்கிறார்கள்.
இந்த விடயங்கள் தொடர்பாக காலி பூசாவிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளிடம் ஆணைக்குழு கூறிய போது தனது பெற்றோர் விசாரித்ததையிட்டு மகிழ்ச்சியடைந்திருப்பதாகவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர்
கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக