
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாகவும், அமெரிக்க அதிகாரிகளை அவர் சந்திக்க மாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கான முன்னாள் தூதுவர் ரொபர்ட் ஒ பிளெக்கை சந்திப்பார் என வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழுவின் கருத்துக்களுக்கும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு முக்கியத்துவம் அளிக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் தொடர்பில் அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக