22 ஜனவரி 2011

சிங்கள அரசின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்குமாம்!

யுத்தக் குற்றச் செயல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடத்தி வரும் விசாரணைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் விசாரணைளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலாளர் பிலிப் ஜே. க்ரொவ்லி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாகவும், அமெரிக்க அதிகாரிகளை அவர் சந்திக்க மாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கான முன்னாள் தூதுவர் ரொபர்ட் ஒ பிளெக்கை சந்திப்பார் என வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழுவின் கருத்துக்களுக்கும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு முக்கியத்துவம் அளிக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் தொடர்பில் அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக