03 ஜனவரி 2011

யாழ்ப்பாண மக்கள் சுதந்திரமாக வாழ்கிறார்களாம்!

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என காவல்துறையினரும், இராணுவத்தினரும் மறுப்பு வெளியிட்டுள்ளனர்.
விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனவும், தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானது எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜயகொடி மற்றும் இராணுவப் பேச்சாளர் உபய மெதவல ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வாரத்தில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவமொன்று தொடர்பான விசாரணைகள் பூர்த்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து வருவதாகவும் விசேட பாதுகாப்பு கெடுபிடிகள் எதுவும் அமுல்படுத்தப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் சம்பவங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளினால் ஏற்பட்டவை எனவும், இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணகைளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக