21 ஜனவரி 2011

மகிந்தவை ஐ,நா.விசாரிக்காதாம்.

தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், நிபுணர்கள் குழு விசாரணை நடத்தாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நியூ யோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டிருக்கவில்லை என ஐக்கிய நாடுகள் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு உறுப்பினர்களையோ அல்லது வேறும் தரப்பினரையோ ஜனாதிபதி சந்திக்க மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்ப வேண்டுமென சில மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை விஜயம் தொடர்பான திகதிகள் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக