19 ஜனவரி 2011

கருணாநிதியை எதிர்ப்பதால் ஜெயலலிதாவை ஆதரிப்பதாக கருதவேண்டாம்.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் பாபர் மசூதியின் தீர்ப்பும், தேசிய அவமானமும் என்ற தலைப்பில் திருச்சியில் கருத்தரங்கம் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், "தமிழ் இனத்தை அழிக்க நினைக்கும் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நான் சொன்னேன். அதற்காக நான் ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமா? நான் ஆதரிக்கிறேன் என்று சொல்லவில்லையே?
கருணாநிதி ஊழல் செய்தார் என்று ஜெயலலிதா சொல்கிறார். ஜெயலலிதா ஊழல் செய்தார் என்று கருணாநிதி சொல்கிறார். நீங்கள் இரண்டு பேரும் ஊழல் செய்தவர்கள் என்று நாங்கள் சொல்கிறோம்.
இந்த நாட்டுக்குத் தேவையில்லை என்று நாங்கள் கூறுகிறோம். ஜெயலலிதா, கருணாநிதியை விட்டால் நாட்டைக் காக்க வேறு ஆளே இல்லையா? நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் புதிய அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.
தமிழினத்தை அழித்த காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் அழிக்க வேண்டும். எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும், எவ்வளவு சீட் வாங்கினாலும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியையும் அதன் கூட்டணியையும் தோற்கடிப்போம்" என்று பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக