21 ஜனவரி 2011

அமெரிக்காவை கண்டித்து பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்.

மஹிந்த ராஜபக்ஸவுடன்அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை மஹிந்த ராஜபக்ஸ அமெரிக்காவுக்கான தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒபாமா, மஹிந்த ராஜபக்ஸவோடு எவ்வித பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொள்ளக் கூடாது.
போர்க் குற்றவாளியான மஹிந்தரை அமெரிக்கா வரவேற்கக் கூடாது என கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக