18 ஜனவரி 2011

நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு நெதர்லாந்து புகலிடம் வழங்கியுள்ளது!

மரணப் படுக்கையிலிருக்கும் இலங்கைச் சிறுவன் ஒருவனுக்கு நெதர்லாந்து அரசாங்கம் புகலிடம் வழங்கியுள்ளது. நாடு கடத்தப்படுவதற்கு எதிராக சிறுவனின் தாயார் செய்த மேன்முறையீட்டை நெதர்லாந்து நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
குறித்த சிறுவனை பார்வையிடுவதற்கு அவரது பாட்டிக்கு வீசா வழங்குமாறு நெதர்லாந்தின் குடிவரவு குடியகழ்வு அமைச்சர் கெர்ட் லீர்ஸ் தெரிவித்துள்ளார். எட்டு வயதுடைய அபிராம் பரமேஸ்வரன் என்ற சிறுவன் கொடிய நோயினால் மரணத்திற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றார்.
குறித்த சிறுவன் மரணிக்கும் வரையில் நெதர்லாந்திலேயே வாழ்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் விசேட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவனின் தாயாரும் நெதர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சிறுவனின் தாயார் சமர்ப்பித்த புகலிடக் கோரிக்கையை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக