24 ஜனவரி 2011

மட்டக்களப்பில் ரவிசங்கர் நடத்திய அரசியல் பூஜை!

மகா ருத்ர யாகம், தேவார பாராயணம் செய்வதற்காக நேற்றைய தினம் மட்டக்களப்பிற்கு வருகை தந்த ஸ்ரீ ரவிசங்கர் (குருஜீ) அவர்கள் தான் வருகை தந்த நோக்கத்தை மறந்து அரசியல்வாதிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்த விடயமானது மட்டு. மாவட்ட மக்களை வேதனைப்படுத்தியுள்ளது.
இந்த ஆத்மீக நிகழ்வுக்கு அரசியல்வாதிகளை அழைத்தது மட்டுமின்றி அவர்களை மேடையில் அமர வைத்து பொன்னாடை போர்த்தி பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதானது குருஜியின் இலங்கை விஜயத்தில் மக்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆத்மீக நிகழ்வுக்கு முதலமைச்சர் பிள்ளையான், முரளிதரன், ஹிஸ்புல்லா, பிரசாந்தன் ஆகியோர் அழைக்கப்பட்டு குருஜியால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செவல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் அழைக்கப்பட்டனர் ஆனால் அவர்கள் மக்களுடன் தரையில் அமர்ந்திருந்து நிகழ்வைக் கண்டுகளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக