23 ஜனவரி 2011

யாழ்,வன்சம்பவங்களுக்கு புலிகளே பொறுப்பு என்கிறது ஈ,பி,டி,பி.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பு சொல்ல வேண்டுமென ஈ.பி.டி.பி. கட்சி அறிவித்துள்ளது.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் படுகொலைகள், கடத்தல்கள், கப்பம் கோரல்கள் போன்ற சம்பவங்களுக்கும் ஈ.பி.டி.பி. கட்சிக்கும் தொடர்பில்லை எனவும், தமிழீழ விடுதலைப் புலிகளே இதனை மேற்கொள்வதாகவும் யாழ்;ப்பாண மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், சில உறுப்பினர்கள் இன்னமும் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று பேரை ஈ.பி.டி.பி.யினர் படுகொலை செய்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கும் ஈ.பி.டி.பி. கட்சிக்கும் தற்போது எவ்வித தொடர்புகளும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அச்ச சூழ்நிலையை ஏற்படுத்தி அதன் மூலம் அரசாங்கத்தை சர்வதேச ரீதியில் நெருக்கடி நிலைக்கு தள்ள தமது கட்சி முயற்சிக்கவில்லை என ஈ.பி.டி.பி அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக