16 ஜனவரி 2011

இந்திய விமானப்படை அதிகாரி இலங்கை வந்துள்ளார்!

இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்சல் பிரதீப் வசந்த் நாயக் நான்கு நாள் பயணமாக இன்று சிறிலங்கா வந்தடைந்தார்.
இன்று நண்பகல் கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த அவரை சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்சல் றொசான் குணதிலக மற்றும் உயர்நிலை அதிகாரிகள் வரவேற்றனர்.
சிறிலங்காவில் நான்கு நாட்கள் தங்கியிருக்கும் போது இந்திய விமானப்படைத் தளபதி சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் முப்படைகளின் தளபதிகள், அரசியல் தலைவர்கள் போன்றோரையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
அத்துடன் சிறிலங்கா விமானப்படையின் முக்கிய தளங்களுக்கும் சென்று அவர் பார்வையிடவுள்ளார்.
குறிப்பாக இந்தியா வழங்கிய வான் பாதுகாப்பு ரேடர்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்களுக்கும் அவர் சென்று பார்வையிடத் திட்டமிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களில் இந்திய இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகள் சிறிலங்கா வந்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாகவே விமானப்படைத் தளபதி தற்போது சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்கிடையே பாகிஸ்தானிய இராணுவத் தளபதி ஜெனரல் அஸ்பக் பர்வேஸ் கயானியும் இந்த வாரம் சிறிலங்கா வரவுள்ளார்.
மூன்றுநாள் பயணமாக அவர் எதிர்வரும் புதன்கிழமை கொழுமபை வந்தடைவார்.
இவர் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, இராணுவ, கடற்படை, விமானப்படைத் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இருநாடுகளும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பாக இவர் கலந்துரையாடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஐ.எஸ்.ஐ எனப்படும் பாகிஸ்தானின் உள்ளக புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் நாயகமாக முன்னர் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக