18 ஜனவரி 2011

நாடுகடந்த தமிழீழ அரசுக்கு கிடைத்துள்ள முதலாவது அங்கீகாரம்!

நாடுகடந்த தமீழீழ அரசாங்கத்துக்கு உலக நாடுகளில் முதலாவது அங்கீகாரமாக புதிதாக அமையவுள்ள தென்சூடானிய அரசாங்கத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சூடானுடன் தாம் இணைந்திருக்க விரும்பவில்லை என்பதை புதியதொரு தோ்தலொன்றின் மூலம் வெளிக்காட்டி, தென் சூடானிய மக்கள் தனியாகப் பிரிந்து செல்வதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.
அதற்கான போராட்டங்களை முன்னெடுத்து வந்த சூடானிய மக்கள் கிளர்ச்சி இயக்கத்துடன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கடந்த காலங்களில் பலமான தொடர்புகளைப் பேணி வந்திருந்தனர்.
அதன் காரணமாக தெற்கு சூடான் சுதந்திரம் பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வ முறையில் அழைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு இராஜதந்திர அந்தஸ்தும் வழங்கப்படவுள்ளது.
அதன் காரணமாக உலக நாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்த முதலாவது நாடு என்ற பெருமையை தெற்கு சூடான் அரசாங்கம் பெற்றுக் கொள்ளவுள்ளது. அது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஒரு திருப்பு முனையாகவும், மைல் கல்லாகவும் அமையவுள்ளதாக அரசியல் அவதானிகள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக