18 ஜனவரி 2011

இளம் தமிழ் பெண்கள் பலவந்தமாக ஆடைத்தொழிற்சாலைக்கு அனுப்பிவைப்பு!

கொழும்பில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுவதற்கென மெனிக்பாம் முகாமிலிருந்து இளம் பெண்களும் சிறுமியர்களும் தமது விருப்பத்திற்கு மாறாக ஏற்றி அனுப்பி வைக்கப்படுவதாக பெற்றோர்கள் தன்னிடம் முறைப்பாடு செய்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஞாயிறன்று 18 பேரும் திங்களன்று 30 பேரும் இவ்வாறு ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள்.
ஞாயிறன்று அனுப்பி வைக்கப்பட்டவர்களில் 18 பேர் பெண் பிள்ளைகள். இவர்களில் 5 பேர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் உள்ள ஆதரவற்ற சிறுவர்களுக்கான விடுதிகளில் தங்கியிருந்து பாடசாலைகளில் கல்வி கற்று வருகி ன்றார்கள். தைப்பொங்கலுக்காகப் பெற்றோடம் மெனிக்பாமுக்கு வந்திருந்த வேளையிலேயே இவர்கள் முகாம் பொறு ப்பதிகாகளினால் பலவந்தமாக ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
இதேபோன்று திங்கட்கிழமையும் 30 பேர் இவ்வாறு முகாம் பொறுப்பதிகாரியினால் ஆடைத்தொழிற்சாலைக்கு விருப்பத்திற்கு மாறாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள். இந்த விடயம் குறித்து வவுனியா அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளேன் என என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக