23 ஜனவரி 2011

மகிந்தவின் அமெரிக்க விஜயம் தொடர்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பு!

பிலிப் ஜே கிறவ்ளி
உதவிச் செயலாளர்
வாஷிங்டன் டிசி
ஜனவரி 21,2011
கேள்வி: இலங்கை ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் தொடர்பாக நீங்கள் அறிந்துள்ளது என்ன அல்லது நீங்கள் புரிந்துள்ளது என்ன?
கிறவ்ளி: அவர் ஐக்கிய அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயம் ஒரு தனிப்பட்ட விஜயம்.
கேள்வி: அவர் ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் எவரையும் சந்திக்கப் போவதில்லையா? அதற்கான திட்டம் ஏதும் அவரிடமில்லையா?
கிறவ்ளி: இல்லை
கிறவ்ளி: நான் நினைக்கிறேன் அவர் (ஜனாதிபதி) ரெக்ஸாஸ்இல் இருக்கலாம். உதவிச் செயலாளர் பிளேக்கும் அங்கு தான் சென்றிருக்கிறார். அவர்கள் இருவரும் சந்திக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.
கிறவ்ளி: ஜனாதிபதியின் விஜயத்தின் போது அவ்வாறான ஒரு சந்திப்பும் இல்லை என்பதை நான் அறிவேன். மற்றைய நீங்கள் சொன்ன விடயம் சரியானது. நான் நினைக்கிறேன் றைஸ் பல்கலைக்கழகத்தில் உரையொன்றை ஆற்றுவதற்காக உதவிச் செயலாளர் பிளேக் அங்கு சென்றிருந்தார்.
ஆனால் விசேடமாக எங்களைக் கேட்டால் ஐக்கிய அமெரிக்க அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையே எவ்விதமான பேச்சுக்களும் இல்லை என்று தான் சொல்வேன்.
கேள்வி: இலங்கையின் வெளிவிவகார அமைச்சரும் உடனிருக்கிறார் அல்லவா? நீங்களோ அல்லது உதவிச் செயலாளர் பிளேக்கோ அவரைச் சந்திக்கலாம் அல்லவா?
கிறவ்ளி: மீளவும் சொல்கிறேன். நான் சொல்வது தவறென்றால் திருத்திக் கொள்ளலாம். ஆனால் ஜனாதிபதியின் விஜயத்தோடு தொடர்பான எந்தச் சந்திப்புக்கள் குறித்தும் நான் எதுவும் அறிந்திருக்கவில்லை.
கேள்வி: அவர் மீது விசாரணை மேற்கொள்ளும்படி அல்லது அவர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி குரல்கள் எழுப்பப்படுகிறதே?
கிறவ்ளி: நல்லது. நாங்கள் மிகத் தெளிவாகவே பகிரங்க அறிக்கை ஒன்றை இது தொடர்பில் வெளியிட்டிருக்கிறோம். இலங்கை செய்து வருபவற்றை நாங்கள் ஆதரிக்கிறோம். அது ஒரு தொடர்நடவடிக்கை. அது இப்போதும்நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாங்கள் தெளிவாகவே நம்புகிறோம் சர்வதேச மனித உரிமை சட்டங்களை யார் மீறினார்களோ அவர்களே அதற்குப் பொறுப்பேற்க வேண்டம் என. அத்தோடு இந்தப் பொறுப்புணர்வு என்பது இலங்கையின்p தேசிய நல்லிணக்கத்தோடு பின்னிப்பிணைந்ததாயிருத்தல் அவசியம் என்றும் வலியுறுத்தியிருக்கிறோம்.
அங்கு கற்றறிந்த பாடங்களுக்கான ஆணைக்குழு நூற்றுக்கணக்கான மக்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகிறது. நான் நினைக்கிறேன் அதன் கால எல்லை இவ்வருட ஜுன் வரை நீடிக்கப்படும் என்று. இந்தக் காலகட்டத்தில் அது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும். நாங்கள் நம்புவோம் இலங்கை இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லம் என்றும் அதன் வழியில் இது தொடர்பில் நிபுணர்களின் உதவியையும் பெறும். உதாரணமாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்துக்குள் செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்டுள்ள நிபணர்குழுவின் உதவி பெறப்படலாம். அந்த நிபுணர் குழு இலங்கை தொடர்ந்து மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகளுக்கு தானாகவே உதவி புரியும்.
கேள்வி: சரி, ஜனாதிபதி ராஜபக்சவும் அவரது அரசாங்கமும் ஐநாவின் எத்தகைய விசாரணைகளுக்கும் மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தான் நான் அறிந்தேன். அது சரியா?
கிறவ்ளி: அவ்வாறு தான் நானும் அறிந்தேன்.
கேள்வி: நல்லது அவ்வாறானால் அவர் ஐக்கிய அமெரிக்காவில் இருக்கும் போதே அவரைச் சந்திக்கும் வாய்ப்பை ஏன் பயன்படுத்தக் கூடாது.
கிறவ்ளி: நாங்கள் அவ்வாறு செய்யலாம். இது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. மோதலின் இறுதிக்கட்டத்தில் என்ன நடந்தது என்பது பற்றிய முழுமையான கணிப்பீடு ஒன்றை இலங்கை அரசாங்கம் செய்ய நாங்கள் ஊக்குவி;த்துக் கொண்டிருக்கிறோம்.நாங்கள் நினைக்கிறோம் இது இலங்கையின் எதிர்காலத்திற்குமிகவும் அவசியமானது என்று. இது தொடர்ந்து நடைபெறுவதற்காக நாங்கள் பேசுவதற்கு ஒரு போதும் வருத்தப்படப் போவதி;ல்லை.
கேள்வி: நல்லது சரி இது இலங்கையின் எதிர்காலத்திற்கு மிக மிக அவசியமான ஒன்றென்றால் ஐநாவின் பணிக்கு இது உதவும் என்றால் இங்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஜயம் செய்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரைச் சந்தித்து உங்களுடைய நிலைப்பாட்டை மீளவலியுறுத்தாலம் தானே? அவருடன் நேருக்கு நேராக இது பற்றிக் கதைக்கலாம் தானே?
கிறவ்ளி:இலங்கை அரசாங்கத்திற்கு எங்களுடைய அபிப்பிராயத்தைச் சொல்வதற்கு எத்தகைய பிரச்சினையும் எங்களுக்கில்லை.
கேள்வி: அப்படியானால் எப்படிச் செய்யப் போகிறீர்கள்?
கிறவ்ளி:: நான்....
கேள்வி: அப்படியானால் அவரைச் சந்திப்பதற்குக் கேட்டீர்களா?
கிறவ்ளி:: இல்லை நாங்கள் செய்யவில்லை. அவர் எங்களைச் சந்திப்பதற்குக் கேட்டாரா?
கேள்வி: நல்லது. அவ்வாறானால் நான் ஒரு கேள்வி கேட்கலாமா? நீங்கள் உறுதியாக இருக்கும் பட்சத்தில் ஐநா நிபுணர் குழுவின் தலையீட்டை அவருடைய அரசாங்கம் எதிர்த்ததன் காரணமாக பலவீனமடைந்துள்ள அவரை ஏன் சந்திக்க ஏன் கேட்கக் கூடாது.
கிறவ்ளி: நல்லது, இந்தப் போக்கு எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம். அது விரைவிலேயே வீழ்ச்சி காணுமாயின் அவ்வாறு சொல்ல நாங்கள் ஒரு போதும் தயங்கப் போவதில்லை.
தமிழில் : ஜிரிஎன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக