25 ஜனவரி 2011

நேற்றைய தாக்குதலில் மூன்று கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்!

அனுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் மூன்று கைதிகள் கொல்லப்பட்டதுடன் மேலும் 25 பேர் காயமடைந்து, அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார். காயமடைந்த 25 பேரில் 8 பேர் சிறைச்சாலை அதிகாரிகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதிகள் கடந்த 23 ஆம் திகதி முதல் சிறைச்சாலை கூரையின் மீது அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தாகவும் இவர்களை கீழே இற்குவதற்கு இராணுவத்தினரையும் காவற்துறையினரையும் வரவழைக்க நேர்ந்ததாகவும் அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்ததாகவும் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
கைதிகள் கற்களால் தாக்குதல் நடத்தி, சிறைச்சாலை சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி பதற்றமாக நடந்து கொண்டதால், இராணுவத்தினருக்கும் காவற்துறையினருக்கும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் போனது. காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நேற்று பிற்பகல் 4 மணியில் இருந்து இரவு 9 மணி வரை இந்த பதற்ற நிலை காணப்பட்டதாகவும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இராணுவத்தினரும், காவற்துறையினர் கடும் சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
கைதிகள் சிறையில் டயர்களை கொளுத்தி, சிறைச்சாலை சொத்துக்களுக்கு பெரும் சேதம் ஏற்படுத்தியுள்ளதாகவும் சிறையில் உள்ள மருந்தகத்தை உடைத்து அதில் உள்ள மருந்துகளை நசாப்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சில இராணுவ அணிகள் வரவழைக்கப்பட்டன. கைதிகள் தப்பி செல்வதை தடுக்க சிறைச்சாலைi சுற்றி கடும் பாதுகாப்பு போடப்பட்டதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் கூறியுள்ளார். இதேவேளை அனுராதபுரம் சிறைச்சாலை சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். அத்துடன் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்றிரவு சிறைச்சாலைக்கு விஜயம் செய்து சம்பவம் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக