17 ஜனவரி 2011

இலங்கை தமிழர் பிரச்சனையில் அதிக அக்கறை காட்டியவர் எம்,ஜி,ஆர்.

எங்களை மதித்து அழைக்கும் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என, லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
லட்சிய தி.மு.க. தலைவரும், நடிகருமான விஜய டி.ராஜேந்தர் படப்பிடிப்புக்காக மதுரை சென்றுள்ளார். மதுரை வந்த விஜய டி.ராஜேந்தர் கே.கே.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது இலங்கை தமிழர் பிரச்சினையிலும், விடுதலைப்புலி விவகாரத்திலும் அதிக அக்கறை காட்டினார். எம்.ஜி.ஆருக்கு பிறகு சிறுசேமிப்பு தலைவர் பதவி எனக்கு கிடைத்தது.
ஆனால் இலங்கை தமிழர்கள் பிரச்சினையை தீர்க்க முடியாததால் அந்த பதவியை நான் ராஜினாமா செய்தேன்.
வருகிற சட்டசபை தேர்தலில் எங்களை மதித்து கூட்டணிக்கு அழைக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுவோம். தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக