20 ஜனவரி 2011

சுவிசில் கைதானவர்களுக்கும் இலங்கைப்படைக்கும் தொடர்பாம்!

சுவிஸர்லாந்தில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் செயற்பாட்டாளர்களின் கணனிகளில் உள்ள ரகசிய தகவல்களின்படி, அவர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்த இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது இராணுவத்தில் பணியாற்றி வரும் இந்த இரண்டு இராணுவ உயர் அதிகாரிகள் விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளனர். இந்த தகவலை உறுதிப்படுத்திய சுவிஸ் அதிகாரிகள் அவர்களின் பெயர்களை வெளியிட மறுத்துள்ளனர்.
உத்தியோபூர்வமாக இவர்கள் குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்த பின்னர், அவர்கள் யார் என்பது குறித்து ஊடகங்களுக்கு வெளியிடப்படும் எனவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். புலிகளின் 10 செயற்பாட்டாளர்களை முதலில் கைதுசெய்த சுவிஸ் காவற்துறையினர், பின்னர், அப்துல்லா என அழைக்கப்படும் புலிகளின் தலைவர் ஒருவரையும் கைதுசெய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக