15 ஜனவரி 2011

அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள தயாரென மகிந்த தெரிவித்துள்ளார்!

தமிழ் மக்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளத் தயார் எனவும், சகல அரசியல் கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதில் சிக்கல் கிடையாது என்ற போதிலும், காவல்துறை அதிகாரங்கள் பகிரப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தால் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனேடிய குடிவரவு கொள்கை, சுவிட்சர்லாந்தில் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டமை, ஜெர்மனியில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை போன்றவற்றை உதாரணமாக காட்ட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக