28 அக்டோபர் 2011

லிபியாவின் இடைக்கால அரசு மீது சர்வதேச நீதிமன்றில் போர்க்குற்ற வழக்கு!

கடாபி மற்றும் அவரது மகன் கொல்லப்பட்டது போர் விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, இது தொடர்பாக லிபிய அரசு மீது சர்வதேச நீதிமன்றில் போர்க்குற்ற வழக்குத் தொடரவுள்ளோம். இவ்வாறு கடாபியின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
லிபியாவில் புரட்சிப் படையினர் தற்போது நாடு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். லிபிய அதிபர் கடாபி மற்றும் அவரது மகன் ஆகியோர் அவரது சொந்த ஊரான சிர்த் நகரில் புரட்சிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கடாபி குடும்பத்தினர் பலர் தற்போது நாட்டை விட்டு தப்பிச் சென்று வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
போரில் கடாபி கொல்லப்பட்டது தொடர்பாகச் சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடரப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
கடாபி குடும்பத்தினர் சார்பில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சட்டத்தரணி பார்ஸ்டன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர், லிபியாவில் புரட்சிப் படையினர் ஆரம்பத்தில் இருந்தே போர்க்குற்றங்களை புரிந்து வந்துள்ளனர். போர்க்குற்றறத்தை மீறி ஏராளமான இராணுவத்தினரையும் அப்பாவிகளையும் கொன்று குவித்துள்ளனர். கடாபி மற்றும் அவரது மகன் கொல்லப்பட்டதும் போர் விதிமுறைகளுக்கு எதிரானதாகும். எனவே, இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடர இருக்கிறோம்.
இடைக்கால அரசுக்கு லிபியாவை ஆளுவதற்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்கள் ஆட்சியை கடாபியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக